கார்த்திகை மாதம் என்றும் பாராமல் புதிய உச்சம் தொட்ட முட்டை விலை!
கார்த்திகை மாதம் என்றும் பாராமல் முட்டை விலை கடுமையாக உயர்ந்தது.
நாமக்கல்: தங்கம், வெள்ளி விலைகள்தான் கலக்கத்தைத் தருகின்றன என்றால், ஏழை, எளிய மக்கள் நாள்தோறும் வாங்கிச் சாப்பிடும் முட்டை விலையும் இன்று பிரேக்கிங் செய்தியாக மாறியிருக்கிறது.
காரணம், 40 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக, நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கோழி முட்டையின் விலை ரூ.6.15 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதான், இதுவரை மொத்தக் கொள்முதல் விலையில் உச்சபட்ச முட்டை விலையாகும் என்று கூறப்படுகிறது. அதாவது, இன்றைய நிலவரப்படி, முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, ரூ.6.15 காசுகளுக்கு மொத்த வியாபாரிகளால் வாங்கிச் செல்லப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கார்த்திகை மாதத்தில், ஏராளமானோர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதமிருந்து கோயிலுக்குச் செல்வது வழக்கம் என்பதால், இந்த மாதத்தில் அதிகம் பேர் அசைவ உணவுகள் சாப்பிட மாட்டார்கள்.
இந்த மாதத்திலேயே முட்டை விலை இவ்வாறு உயர்ந்தால், அடுத்தடுத்த மாதங்களில் கோழி விலைக்கு முட்டை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மொத்த கொள்முதல் விலை ஒரு பக்கம் ஏறினால், அதை விட சில மடங்கு அதாவது இன்று காலை நிலவரப்படி, சில்லறை விற்பனை கடைகளில் ரூ.7 முதல் ரூ.7.50 வரை ஒரு முட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகளை முன்னிட்டு கேக் போன்றவை செய்யும் பணிகளுக்காக, முட்டை அதிகளவில் கொள்முதல் செய்யப்படுவதால் இந்த விலை உயர்வு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
Egg prices rose sharply, even during the month of Karthigai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.