திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 1-ல் பள்ளிகள் இயங்கும்!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நவ. 1 ஆம் தேதி முழு நாள் இயங்கும் என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
புயல் சின்னம் காரணமாக பெய்த மழைக்காக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் நவ. 1 ஆம் தேதி(சனிக்கிழமை) பள்ளிகள் முழு நாள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காலையில் குறைவு; மாலையில் உயர்வு: தங்கம் விலை நிலவரம்!
Schools in Tiruvallur district will reopen on Nov. 1, the District Education Officer has said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.