FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நாகர்கோவில் வந்தார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி நாகர்கோவில் வந்துள்ளது பற்றி...

Updated On : 15 ஏப்ரல் 2026, 4:13 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தந்துள்ளார்.

தமிழகத்தில் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமா் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று(புதன்கிழமை) மாலை வருகை தந்துள்ளார்.

தில்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் நாகா்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு வந்தார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆா். சிலை வரை ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலைப் பேரணியாகச் சென்று கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டுகிறாா்.

இப்பேரணியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை உள்பட பலா் கலந்து கொள்கின்றனா்.

பிரதமர் வருகையையொட்டி நாகா்கோவில் நகரம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

summary

Prime Minister Modi Arrives in Nagercoil for election campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments