சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்துக்கு ரூ.354 கோடி! நிதியமைச்சர்!
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்துக்கு ரூ. 354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பற்றி...
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்துக்கு ரூ. 354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக பட்ஜெட்டியில் நிதியமைச்சர் மரிய விலசன் அறிவித்துள்ளார்.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார்.
அதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதை இந்த அரசு இலக்காகக் கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நோக்கத்தின் அடிப்படையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற உறுதியான கொள்கையை முதன்மையாகக் கொண்டு செயல்படுவதற்கு அரசு உறுதியாக உள்ளது.
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, பெண்கள் தலைமையிலான காவல் பணிகள், அவசரக்கால நடவடிக்கை மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான காவலர்கள், கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள், பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தேவைகளுக்காக ரூ. 354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.