FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இனிக்க, இனிக்க பேசி விவசாயிகளை ஏமாற்றிவிட்டது தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதைப் பற்றி...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:11 pm IST
எடப்பாடி பழனிசாமி.
பகிர்:

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் ஆர். வினோத் இன்று (ஆக.6) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் சுமார் 130 நிமிடங்கள் வாசித்தார்.

பல்வேறு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், தவெக அரசின் வாக்குறுதிகளாக 100 சதவிகித பயிர்க்கடன் தள்ளுபடி, கரும்புக்கான ஆதார விலை ரூ. 4,500 ஆக உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வேளாண் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “சுமார் இரண்டரை மணி நேர தவெக அரசின் வேளாண் பட்ஜெட் அறிவிப்பில் முக்கிய திட்டங்கள் எதுவுமில்லை.

முந்தைய திமுக ஆட்சியைப் போல வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் நாடகம் போட்டிருக்கிறது தவெக அரசு. இனிக்க, இனிக்க பேசி விவசாயிகளை ஏமாற்றிவிட்டது தவெக அரசு.

ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை. ஆனால், முதல்வர் விஜய் இதுதொடர்பாக வாய் திறக்கவே மறுக்கிறார். குடிமராமத்து, தடுப்பணைகள் கட்டுவது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகவில்லை” என்றார்.

summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has stated that the agriculture budget has left farmers with nothing but deep disappointment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments