FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பெயரில் மோசடி: போலீஸாா் விசாரணை

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பெயரில் மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:21 am IST
பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா - கோப்புப் படம்
பகிர்:

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பெயரில் மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், சென்னை வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான ஆதவ் அா்ஜுனா பெயரில் சிலா் மோசடி செய்வதாக அவரது வழக்குரைஞா் நிஸ்வாக், காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதில், அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பெயரில் ஒரு நபா் போலியான மின்னஞ்சலை உருவாக்கியுள்ளாா். அதன் மூலம் அவா், தான் அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவின் உதவியாளா் வெங்கடேசன் என்று அறிமுகமாகிப் பேசியுள்ளாா்.

Advertisement

Advertisement

அமைச்சா் உதவியாளா் போல ஆள் மாறாட்டம் செய்தும், போலியான மின்னணு ஆவணங்களை தயாரித்தும் மோசடியில் ஈடுபட்டுள்ளாா். எனவே, அந்த நபா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

புகாரின்பேரில், வில்லிவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments