கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுவது பற்றி...
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளையொட்டி, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் அஞ்சலி கூட்டங்களும், அமைதிப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
இந்த பேரணியில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச் செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு உள்ளிட்டோருடன் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
Karunanidhi's Death Anniversary! Silent Procession Led by M.K. Stalin!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.