மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி
மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம் என கனிமொழி பேசியது பற்றி...
மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என திமுக எம்.பி. கனிமொழி சனிக்கிழமை (ஆக. 8) தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற, மத்திய பாஜக அரசு ஆலோசித்து வருகிறது.
இதனால், தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதுகுறித்து கனிமொழி பேசியதாவது:
திமுக கூட்டணியைச் சார்ந்த 32 எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொகுதி வரையறை தொடர்பாக முதல்வர் இன்று கூட்டிய கூட்டத்தின் முடிவு குறித்து இன்னும் தெளிவு ஏற்படவில்லை.
தமிழகத்தில் உள்ள மேக்கேதாட்டு பிரச்னையிலிருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர். நாங்கள் நியாயமான தொகுதி மறுவரையறையைக் கோருகிறோம்.
தேர்தலின் போது, திமுக தலைவரும் அப்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின், தேர்தல் வெற்றியை விட தமிழ்நாட்டைப் பாதுகாப்பதே முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார். தேர்தலில் வெற்றி பெறுவதை விட, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
அதுவே எங்களின் நோக்கம். எங்கள் தலைவரின் நோக்கமும் அதுதான். தமிழக அரசின் தலைமைச் செயலர், தவெக தலைமையகத்தின் செயலரைப் போலச் செயல்படுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக அழைப்பதும், கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கடிதம் அனுப்புவதையும் அவர் செய்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன என்று கனிமொழி குறிப்பிட்டார்.
DMK MP Kanimozhi stated on Saturday (August 8) that this all-party meeting was convened merely to divert attention from the Mekedatu issue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.