சட்டென மாறிய வானிலை! சென்னையில் மழை!
சட்டென மாறிய வானிலையால் சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
சென்னையில் காலை முதலே சூரியன் தலைக்காட்ட விரும்பாமல் சற்று ஒதுங்கியே காணப்பட்ட நிலையில், பிற்பகல் 3 மணிக்கு ஆங்காங்கே மழை தலைக்காட்டத் தொடங்கியிருக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களாக மாலையில் அல்லது இரவில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், சனிக்கிழமை சற்று முன்னதாகவே மழை தன்னுடைய கடைமையச் செய்யத் தொடங்கிவிட்டது.
சென்னையில் அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் 3 மணிக்கு திடிரென கருமேகங்கள் சூழ்ந்து மழையைப் பொழிந்தன. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது மறைவான இடங்களில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.