சென்னையில் இன்று தூர்வாரப்படும் நாராயணபுரம் ஏரி, வேளச்சேரி ஏரிகள்!
சென்னையில் இன்று நாராயணபுரம் ஏரி, வேளச்சேரி ஏரிகள் தூர்வாரப்படுகின்றன.
சென்னையில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி சீரமைப்பு செய்யும் பணிகள் கடந்த ஒரு சில நாள்களாக தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இன்று பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி மற்றும் வேளச்சேரி ஏரிகள் தூர்வாரப்படுகின்றன.
இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவுப்படி, சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பள்ளிக்கரணை நாராயணபுரம் கிராமம், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி
சென்னை மாவட்டம், வேளச்சேரி வட்டம், வேளச்சேரி கிராமம், வேளச்சேரி ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்து களப்பணியை ஆய்வு செய்தார்.
Advertisement
Advertisement
முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி இன்று (29-07-2026 புதன்கிழமை) காலை 9.00 மணியளவில் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பள்ளிக்கரணை நாராயணபுரம் கிராமம், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு, காலை 11.00 மணியளவில் சென்னை மாவட்டம், வேளச்சேரி வட்டம், வேளச்சேரி கிராமம், வேளச்சேரி ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கள ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி:
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் – 14, வார்டு எண் 186 எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் அமைந்துள்ள நாராயணபுரம் ஏரியின் பெரும்பாலான பகுதிகள் நகரமயமாதலின் விளைவாக குடியிருப்பு பகுதிகளாக மாற்றமடைந்துள்ளதால், தற்போது இந்த ஏரியானது நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் இருக்கவும், சுற்று சூழல் பாதுகாக்கவும் பயன்பட்டு வருகிறது.
நாராயணபுரம் ஏரியானது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள கடைகோடி (Tail end) ஏரியாகும். ஆகையால், இந்த ஏரிக்கு மேற்புறத்தில் அமைந்துள்ள தென் சென்னை பகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை அணை ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, பல்லாவரம் ஏரி ஆகிய ஏரிகளின் உபரிநீரானது நாராயணபுரம் ஏரியில் வடிந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு சென்றடையும் வகையில் அமைந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ள இந்த ஏரியில் ஆகாயத்தாமரைகள், மிதவைத் தாவரங்கள் மற்றும் மிதவைப் பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்ளப்படுவதால் சென்னை பெருநகராட்சிக்குட்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ள பாதிப்புகள் குறைக்கப்படும்.
வேளச்சேரி ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி வேளச்சேரி ஏரியானது பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் – 13, வார்டு எண் 175 உட்பட்ட, சென்னை மாவட்டம், வேளச்சேரி வட்டம், வேளச்சேரி கிராம புல எண்: 123/1 பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் ஆயக்கட்டு பகுதிகள் அனைத்தும் நகரமயமாதலின் விளைவாக பல வருடங்களுக்கு முன்னரே அடர்ந்த குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் அடைந்துவிட்டதால், விவசாய பணிகள் ஏதுமின்றி இந்த ஏரி தற்போது நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் இருக்கவும், சுற்று சூழல் பாதுகாக்கவும் பயன்பட்டு வருகிறது.
தற்போது இந்த ஏரியில் 22.40.0 ஹெக்டேரில் மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இவ்விதமாய் தேக்கி வைக்கப்படும் நீர் சுற்றுப்பகுதிகளுக்கு நிலத்தடிநீரை மேம்படுத்தும் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஏரியில் ஆகாயதாமரை படர்ந்துள்ளதால் ஏரியின் கொள்ளளவு மற்றும் நீர் கடத்தும் திறன் குறைந்த நிலையில் உள்ளது.
இவற்றை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே, முதல்வர் உத்தரவுப்படி, நீர்வளத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் பெருநிறுவனப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன், வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள, வேளச்சேரி ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருட்கள் மற்றும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி மழைக்காலங்களில் மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படவுள்ளது.
பருவ மழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, திட்டமிடப்பட்டு முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Narayanapuram and Velachery lakes in Chennai are being desilted today!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.