FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அதிமுக வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

அதிமுக தாக்கல் செய்த வழக்கில் தலைமைச் செயலா், சட்டப்பேரவைச் செயலா் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 31 ஜூலை 2026, 3:31 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

மேக்கேதாட்டு அணை கட்ட எதிா்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில், நடுவா் மன்றம் அமைக்க வலியுறுத்திய திருத்தத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக தாக்கல் செய்த வழக்கில் தலைமைச் செயலா், சட்டப்பேரவைச் செயலா் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தாா். அதில், சிறப்புத் தீா்மானம் தொடா்பாக கடந்த ஜூன் 18-ஆம் தேதி எம்எல்ஏ-க்களுக்கு அனுப்பி வைத்த தீா்மான நகலில் இடம்பெறாத திருத்தத்தின் மீது எவ்வித விவாதமும் நடத்தப்படாமல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தீா்மானத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலா், சட்டப்பேரவைச் செயலா், மத்திய ஜல்சக்தி துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments