FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் செப். 4 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

24 வினாடிகள் முன்பு
இன்றைய செய்திகள் - AP | ISRO
பகிர்:
Updated On : 4 செப்டம்பர் 2026, 9:39 pm IST

கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

பாபநாசம் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Updated On : 4 செப்டம்பர் 2026, 9:17 pm IST

நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு

நேபாள வெள்ளத்தில் சிக்கியவர்களில் இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Updated On : 4 செப்டம்பர் 2026, 9:08 pm IST

கோரக்பூர் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டெடுப்பு!

கோரக்பூர் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Updated On : 4 செப்டம்பர் 2026, 8:11 pm IST

அடுத்த 2 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு(இரவு 10 மணிவரை) 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 4 செப்டம்பர் 2026, 7:16 pm IST

இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம்

இசக்கி சுப்பையா விவகாரத்தில் பேரவைக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதிலை அறிவிப்பேன் என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Updated On : 4 செப்டம்பர் 2026, 5:44 pm IST

இல்லாத டயர் ஆலையை மூடுவது எப்படி?

ராணிப்பேட்டையில் இல்லாத ஒரு டயர் தொழிற்சாலையை மூடுவது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

Updated On : 4 செப்டம்பர் 2026, 5:44 pm IST

இதுபோன்ற கேள்விகளால் சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்! செங்கோட்டையன் பதில்! அப்படி என்ன கேள்வி?

பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவது அனைத்து முதல்வர்களும் பின்பற்றிய நடைமுறைதான். அனைத்து கேள்விகளுக்கும் முதல்வரே பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Updated On : 4 செப்டம்பர் 2026, 3:52 pm IST

புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தன்னுடைய சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய வழக்கில், புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுகொண்டார்.

Updated On : 4 செப்டம்பர் 2026, 3:52 pm IST

உயிருடன் இருந்தது எப்படி? 9 நாள்களுக்குப் பின் கிருஷ்ண ஜெயந்தியில் மீட்கப்பட்டவரின் ஆச்சரிய தகவல்!

நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 9 நாள்களுக்குப் பின் மீட்கப்பட்ட சஞ்சய் ஷா, தான் ஹரே கிருஷ்ணா எனும் மகா மந்திரத்தையே உச்சரித்துக் கொண்டிருந்ததாக தன்னை மீட்டவர்களிடம் கூறியிருக்கிறார்.

Updated On : 4 செப்டம்பர் 2026, 1:32 pm IST

கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சு!

Updated On : 4 செப்டம்பர் 2026, 1:32 pm IST

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

Updated On : 4 செப்டம்பர் 2026, 11:54 am IST

மோடி பெருமிதம்

ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்து வரும் திறன்களின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

Updated On : 4 செப்டம்பர் 2026, 11:54 am IST

பலி 1,290 ஆக உயர்வு

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,290 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா்கள் 275 போ் உள்பட 4,798-க்கும் மேற்பட்டோா் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணி வெள்ளிக்கிழமை 10-ஆவது நாளாக தொடா்கிறது.

Updated On : 4 செப்டம்பர் 2026, 11:54 am IST

உயிருடன் மீட்கப்பட்ட இருவர்

நேபாள வெள்ளத்தில் உருகுலைந்த நீா்மின் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களில் முதல்கட்டமாக இருவர் உயிருடன் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.

Updated On : 4 செப்டம்பர் 2026, 11:54 am IST

தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 4) சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 4 செப்டம்பர் 2026, 11:54 am IST

இஓஎஸ்-5 செயற்கைக்கோள்

ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்ட இஓஎஸ்-5 செயற்கைக்கோள் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Updated On : 4 செப்டம்பர் 2026, 11:54 am IST

விஜய் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு, முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments