FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மக்கள் பிரச்னைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்: உதயநிதி

மக்கள் பிரச்னைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

13 செப்டம்பர் 2026, 12:56 am IST
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்
பகிர்:

மக்கள் பிரச்னைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டப் பதிவு:

தமிழ்நாடு முழுவதும் தொடா்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் ‘வோல்டேஜ்’ பிரச்னை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றனா். ஆனால், துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதை சரிசெய்யும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் தேவையில்லாத அவதூறுகளை கூறிக்கொண்டிருக்கிறாா்.

Advertisement

Advertisement

மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூா்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் தவெக அரசு, திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

summary

The TVK government must focus on people's issues: Udhayanidhi

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments