FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தூத்துக்குடி தேரிக்காடுகள் பகுதிகளில் தாதுமணல் எடுக்கும் கொடிய திட்டம்! கனிமொழி எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேரிக்காடுகளை அழிக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என கனிமொழி வலியுறுத்தல்...

12 செப்டம்பர் 2026, 4:08 pm IST
திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த தேரிக்காடுகள் உள்ள பகுதிகளில் தாதுமணல், அரிய மண் தனிமங்களை எடுக்கும் திட்டங்களை தவெக அரசு கைவிட வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் குதிரைமொழி, சாத்தான்குளம் தேரிக்காடுகள் உள்ள நிலையில், அங்கு தாது மணல் எடுக்கும் திட்டத்த்தைக் கொண்டுவர தவெக அரசு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த தேரிக்காடுகளை வனவிலங்கு சரணாலயமாகவும், சூழலியல் உணர்திறன் மண்டலமாகவும் அறிவிக்கும் முயற்சியும் மறுபுறம் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் இதுபற்றி திமுக எம்.பி. கனிமொழி, தனது எக்ஸ் பக்கத்தில்,

"பலவகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாகவும், செம்மண் குன்றுகள் நிறைந்த புவியியல் முக்கியத்துவம் மிக்க பகுதியாகவும் இருப்பவை குதிரைமொழி மற்றும் சாத்தான்குளம் தேரிக்காடுகள்.

இத்தகைய தேரிக்காடுகளை வனவிலங்கு சரணாலயமாகவும், சூழலியல் உணர்திறன் மண்டலமாகவும் அறிவிக்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் அதே நிலப்பரப்பில் தாதுமணல் மற்றும் அரிய மண் தனிமங்களை எடுப்பதற்கான கொடிய திட்டங்களையும் தவெக அரசின் கனிமவளத்துறை முன்னெடுத்து வருகிறது.

தமிழ்நாட்டின் அரிய வகை நிலப்பரப்பாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான சூழலியல் பகுதிகளாகவும் விளங்கும் இந்தத் தேரிக்காடுகளை அழிக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

TVK government must abandon the plan to destroy the Teri forests: Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments