FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை!

சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது குறித்து...

14 செப்டம்பர் 2026, 12:47 pm IST
சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை! - படம்: தினமணி
பகிர்:

சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

சீர்காழி பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே கடும் வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வழக்கம்போல இன்று(செப். 14) காலை 10 மணி வரை வெப்பம் நிலவியது.

அதன் பிறகு, திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

மழை - படம்: தினமணி

விநாயகர் சதுர்த்தி வியாபாரம் மந்தமாக இருந்தாலும், இந்த திடீர் மழைப்பொழிவு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சீர்காழி, விளந்திட சமுத்திரம், சட்டநாதபுரம், செம்மங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

summary

Heavy rainfall in Sirkazhi and its surrounding areas has brought down the temperature, creating a cool atmosphere.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments