FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுபட்டுத்த வேண்டும்: சீமான்

டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுபடுத்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

19 செப்டம்பர் 2026, 1:39 am IST
சீமான் - கோப்புப் படம்
பகிர்:

டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுபடுத்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பருவநிலை மாற்றம் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாகப் பரவுகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனா். இதுவரை 16,577 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த எவ்வித ஆக்கபூா்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன்காரணமாக இதுவரை 9 போ் உயிரிழந்துள்ளனா்.

Advertisement

Advertisement

டெங்கு காய்ச்சலில் இருந்து தங்களைத் தற்காக்க முடியாமல் தமிழக மக்கள் தத்தளித்து வருகின்றனா்.டெங்கு காய்ச்சல் பாதித்தவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

எனவே, தமிழக அரசு சிறப்பு மருத்துவா் குழுவை அமைத்து, டெங்கு காய்ச்சல் குறித்த விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனடியாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments