FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தை மாற்றுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம்?

சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வேறொரு அமைப்பிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பது தொடர்பாக....

19 செப்டம்பர் 2026, 2:32 pm IST
சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தை மாற்றுக - கோப்புப் படம்
பகிர்:

சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து 'இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை' (ஏஏஐ) நீக்கிவிட்டு, அந்த பொறுப்பை வேறொரு அமைப்பிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜோசப் விஜய் எழுதியுள்ள கடிதத்தில்,

தமிழ்நாடு தொழிற்துறைக்கு ஏற்ற மாநிலமாகவும், வணிகத்தையும் முதலீட்டையும் ஈர்ப்பதற்குத் தேவையான தொடர்ச்சியான முயற்சிகளைத் மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

தென்னிந்தியாவிற்கான ஒரு முக்கிய நுழைவாயிலாகத் திகழும் சென்னை சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்தை பெருமளவில் கையாளும் ஒரு முக்கிய மையமாகும். பிராந்திய வர்த்தகம், சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

தொழில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலமான தமிழகத்தில், தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு சர்வதேச விமான நிலைய உள்கட்டமைப்பும் நிர்வாகமும் முக்கியமானவை. பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்குககளைக் கையாளும் திறன் என எதுவாக இருந்தாலும், சென்னை விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேவை. ஆனால் விமான நிலையத்தை நிர்வகிக்கும் நிர்வாகத்தில் காணப்படும் குறைபாடுகள் மாநிலத்தின் பொருளாதார வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மாநிலத்தில் தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்கேற்ற சிறப்பான விமான நிலையமும் திறமையான நிர்வாகமும் இன்றியமையாதது என்பதால், சென்னை விமான நிலையத்தை தற்போது நிர்வகித்து வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை மாற்றிவிட்டு, வேறு நிறுவனத்திடம் நிர்வாகத்தைக் கொண்டுவர வேண்டும்.

இதன்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நிர்வகித்து வரும் சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியாருக்கோ வேறொரு நிறுவனத்துக்கோ மாற்றக்கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம் மற்றும் சரக்குக் கையாளுதல் ஆகியவற்றின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசு கோரியுள்ள சிறந்த நிர்வாகத்திற்கான கோரிக்கையை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும் மத்திய அரசின் பிற தொடர்புடைய அமைப்புகளும் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்தின் செயல்பாடுகளை, நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு இலக்குகள் மற்றும் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பொருளாதார உத்திகளுடன் ஒருங்கிணைப்பதே இந்த நிர்வாக மாற்ற வேண்டுகோளுக்கான நோக்கமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

மேலும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், தற்போதைய விமானநிலையத்தையே விரிவாக்கம் செய்யும் தமிழக அரசின் முடிவை அடுத்து, இந்த நடவடிக்கை சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதற்கான ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

summary

Tamil Nadu Chief Minister C. Joseph Vijay has urged Prime Minister Narendra Modi to replace the Airports Authority of India (AAI) as Chennai airport’s operator.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments