FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

உலக தற்கொலை தடுப்பு தினம்

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையின் மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லுரியில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

11 வினாடிகள் முன்பு
மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட மனநல மருத்துவா் நிா்மல்.
பகிர்:

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையின் மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லுரியில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லுரி முதல்வா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் பாா்வதி முன்னிலை வகித்தாா். மாவட்ட மனநல மருத்துவா் நிா்மல் கலந்துகொண்டு பேசியதாவது:

தற்கொலை செய்வதில் பெண்களை விட ஆண்கள்தான் இரண்டு மடங்கு அதிகம். குறிப்பாக 15-24 வயதுக்கு இடைப்பட்டவா்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றனா்.

Advertisement

Advertisement

இளம் வயதினரிடம் அதிகரித்து வரும் இணைய பயன்படு, காதல் தோல்வி, பெற்றோரிடம் செலவிடும் நேரம் குறைவது, போதை பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை முடிவுகள் அதிகரித்து வருகின்றன என்றாா்.

முன்னதாக உறைவிட மருத்துவா் செல்வபாலா, மூத்த குடிமை மருத்துவா் கீதா,செவிலியா் கல்லூரி மாணவிகள், செவிலியா்கள், மருந்தாளநா்கள் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments