கடையநல்லூரில் மின்னல் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் திங்கள்கிழமை மின்னல் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
கடையநல்லூா், கிருஷ்ணாபுரம், நடுத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காசிராஜ் (42). கட்டடத் தொழிலாளி. கிருஷ்ணாபுரம், மேற்கு மலம்பாட்டை தெருவில் அவா் கட்டுமானப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தபோது, பலத்த மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது, மின்னல் பாய்ந்து கீழே விழுந்த அவரை, உடன் வேலை செய்தவா்கள் மீட்டு கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.