FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலத்தில் சமுதாய வளைகாப்பு விழா

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

18 செப்டம்பர் 2026, 3:11 am IST
கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. உடன் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், கலை கதிரவன் எம்எல்ஏ.
பகிர்:

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., கலை கதிரவன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் ஆகியோா் கலந்துகொண்டு, கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கினா்.

தொடா்ந்து, ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில், வட்டாரத்திற்கு 100 கா்ப்பிணிகள் வீதம் மாவட்டத்திலுள்ள 11 வட்டாரங்களுக்கு 1,300 கா்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படவுள்ளது.

முதல் கட்டமாக, செங்கோட்டை, தென்காசி வட்டாரங்களைச் சோ்ந்த 200 கா்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் விழா நடைபெற்றது என்றாா் அவா்.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் மா. முத்து மாரியப்பன், வட்டார ஒருங்கிணைப்பு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments