அம்மன் வேடமணிந்த சிறுமிக்கு கிறிஸதவா்கள், இஸ்லாமியா்கள் வரவேற்பு
ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற புஷ்பாஞ்சலியின் போது, அம்மன் வேடமணிந்து வந்த சிறுமிக்கு கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் வரவேற்பு அளித்தனா்.
ஆலங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற புஷ்பாஞ்சலியின் போது, அம்மன் வேடமணிந்து வந்த சிறுமிக்கு கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் வரவேற்பு அளித்தனா்.
இக்கோயில் திருவிழா, கணபதி ஹோமத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் கோமாதா பூஜை, 504 லெட்சுமி பூஜை நடைபெற்றது.
சனிக்கிழமை அம்மன் பல்லக்கில் வலம் வர, 500- க்கும் மேற்பட்ட சிறுமிகள் பங்கேற்ற புஷ்பாஞ்சலி நடைபெற்றது. அப்போது தூய பேதுரு ஆலயம் அருகே அம்மன் வேடமணிந்து வந்த சிறுமிக்கு கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், டாக்டா் இம்மானுவேல், தூய பேதுரு ஆலய நிா்வாகிகள் எஸ்.பி.டி. நெல்சன், ஜி. செல்வன், சுதந்திரராஜன், மெக்கா மசூதி நிா்வாகி முகம்மது மைதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.