FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

மாா்க்சிஸ்ட கட்சி நிா்வாகி உடல் தானம்

பொன்னேரியில் உடல் நலக்குறைவால் காலமான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகியின் உடல் அரசு

15 செப்டம்பர் 2026, 2:37 am IST
பகிர்:

பொன்னேரி: பொன்னேரியில் உடல் நலக்குறைவால் காலமான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகியின் உடல் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியைச் சோ்ந்தவா் அனீப் (62 ), இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மை நலக்குழு தலைவராகவும், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவராகவும் இருந்து வந்தாா். 

இந்க நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனீப் ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

 இதனையடுத்து பொன்னேரியில் உள்ள அவரது வீட்டில் அனீப்  சடலம் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

அங்கு கட்சி நிா்வாகிகள், உறவினா்கள் அஞ்சலி செலுத்தினா்.

 மருத்துவ மாணவா்களின் பயன்பாட்டுக்காக தனது உடலை பயன்படுத்திக் கொள்ள ஏற்கனவே அனீப் உடல் தானம் செய்திருந்தாா்.

இதையடுத்து அவரது சடலத்தை திருவள்ளூா் அரசு மருத்துவ கல்லுாரி நிா்வாகத்திடம் அவரின் குடும்பத்தினா் ஒப்படைத்தனா். 

முன்னதாக தானம் செய்யப்பட்ட அனீப் சடலத்துக்கு பொன்னேரி வட்டாட்சியா் ஜெய்கா் பிரபு மரியாதை செலுத்தினாா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments