சென்செக்ஸ் புதிய உச்சம்! 63,000 புள்ளிகளைக் கடந்து சாதனை
அதிகபட்சமாக எம் & எம் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2.16 சதவிகிதமும், பவர் கிரிட் 2.14 சதவிகிதமும், எச்யுஎல் 1.78 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 1.55 சதவிகிதமும் உயர்வுடன் காண
இந்திய பங்குச்சந்தை வணிகம் புதன்கிழமை இன்று (நவ.30) ஏற்றத்துடன் நிறைவடைந்தது. முதல்முறையாக சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 417.81 புள்ளிகள் உயர்ந்து 63,099.65 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.67 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 140.30 புள்ளிகள் சரிந்து 18,758.35 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.75 சதவிகிதம் உயர்வாகும்.
Advertisement
Advertisement
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 21 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. 9 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக எம் & எம் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2.16 சதவிகிதமும், பவர் கிரிட் 2.14 சதவிகிதமும், எச்யுஎல் 1.78 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 1.55 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.