FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாதனை உச்சத்தை எட்டிய பிறகு ஏற்ற இறக்கத்துடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முக்கிய வட்டி விகித முடிவுக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

29 ஜூலை 2024, 6:44 pm IST
சித்தரிக்கப்பட்டது
பகிர்:

மும்பை: இந்த வார இறுதியில் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முக்கிய வட்டி விகித முடிவுக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 23.12 புள்ளிகள் உயர்ந்து 81,355.84 புள்ளிகளில் நிலைபெற்றது. அமெரிக்க பத்திர லாபம் வருவாய் சரிவைத் தொடர்ந்து காலை நேர வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 575.71 புள்ளிகள் உயர்ந்து 81,908.43 புள்ளிகளை எட்டியதால் முதலீட்டாளர்கள் அதிக அளவில் லாபத்தை பதிவு செய்ய விரும்பினர்.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 1.25 புள்ளிகள் உயர்ந்து 24,836.10 புள்ளிகளில் நிலைபெற்றது. பகல் நேரத்தில், இது 164.9 புள்ளிகள் உயர்ந்து 24,999.75 என்ற புதிய வாழ்நாள் உச்சத்தை எட்டியது.

Advertisement

Advertisement

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன் & டூப்ரோ, பஜாஜ் பின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இண்டஸ் இண்ட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. அதே வேளையில் பாரதி ஏர்டெல், டைட்டன், ஐடிசி, கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை சரிந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் (வெள்ளிக்கிழமையன்று) ஏற்றத்துடன் முடிவடைந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ.2,546.38 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.31 சதவீதம் குறைந்து பீப்பாய்க்கு 80.88 டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments