விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 14 பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!
இந்தியப் பங்குச் சந்தை மூன்று நாள் இடைவேளைக்குத் தயாராகி வருகின்றன.
மும்பை: இந்தியப் பங்குச் சந்தை மூன்று நாள் இடைவேளைக்குத் தயாராகி வருகின்றன. பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவை செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 14 வரை மூடப்பட்டிருக்கும்.
செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகள் வழக்கமான வாரந்திர விடுமுறை நாட்களாகும். அதேசமயம் செப்டம்பர் 14 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பங்குச் சந்தை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வர்தகதம் மீண்டும் செப்டம்பர் 15 ல் (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை வெளியிட்ட பங்குச் சந்தை விடுமுறை நாட்காட்டியின் அடிப்படையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 14ஆம் தேதி விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
செப்டம்பர் 14 விடுமுறைக்குப் பிறகு, மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 தேதி அன்றும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் 20 அன்று தசரா பண்டிகைக்கு பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கும்.
The Indian stock market is gearing up for a three-day break.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.