வினா - விடை வங்கி... தமிழ்நாட்டில் கலை மற்றும் கட்டடக் கலை!
தமிழ்நாட்டில் கலை மற்றும் கட்டடக் கலை வினா - விடை வங்கி...
1. குடைவரைக் கோவில் அமைப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்த பல்லவ மன்னன் யார்?
மகேந்திரவர்மன்
2. மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட முதல் குடைவரைக் கோவில் எது?
மண்டகப்பட்டு கோவில், விழுப்புரம்
3. மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோவிலைக் கட்டியவர் யார்?
இரண்டாம் நரசிம்மவர்மன்
4. தென்னிந்தியாவின் மிகவும் பழமையான கட்டுமானக் கோவில் எது?
கடற்கரைக் கோவில், மகாபலிபுரம்
5. ராஜசிம்ஹா என அழைக்கப்படும் பல்லவ அரசன் யார்?
இரண்டாம் நரசிம்மவர்மன்
6. காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?
இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்ஹா)
7. காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோவிலைக் கட்டியவர் யார்?
இரண்டாம் நந்திவர்மன்
8. பஞ்சபாண்டவர் ரதங்கள் எவை?
1. திரௌபதி ரதம்
2. தர்மராஜ ரதம்
3. பீம ரதம்
4. அர்ஜூனா ரதம்
5. நகுலசகாதேவ ரதம்
9. அர்ஜூனாவின் தவம் நினைவுச் சின்னத்தின் நீளம் மற்றும் உயரம் என்ன?
100 அடி நீளம் & 45 அடி உயரம்
10. மகாபலிபுர நினைவுச் சின்னங்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?
1984
11. எந்த பாண்டியர்கள் பல்லவர்களின் சமகாலத்தவர்கள்?
முற்கால பாண்டியர்கள்
12. பாண்டியர்களின் குகைக் கோவில்கள் காணப்பட்ட இடங்கள்?
மலையடிக் குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், திருச்சிராப்பள்ளி
13. பாண்டியர்களின் குடைவரைக் கோவிலுக்கு எடுத்துக்காட்டு?
கழுகுமலை வெட்டுவான் கோவில்
14. பாண்டியர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டு?
1. மீனாட்சியம்மன் கோவில், மதுரை
2. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி
15. முற்கால பாண்டியர்களின் ஓவியக் கலைக்கு எடுத்துக்காட்டு?
சித்தன்னவாசல், புதுக்கோட்டை
திருமலைபுரம், திருநெல்வேலி
16. முற்கால சோழர்களின் கட்டக்கலை முறைக்கு பெயர்?
செம்பியன் மகாதேவி ஸ்டைல்
17. தஞ்சை பெரிய கோவில் விமானத்தின் உயரம் என்ன?
216 அடி (66 மீட்டர்கள்)
18. தக்ஷிண மேரு என அழைக்கப்படும் கோவில் எது?
தஞ்சை பெரிய கோவில்
19. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியின் நீளம் மற்றும் உயரம் என்ன?
16 அடி நீளம் & 13 அடி உயரம்
20. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் உயரம் என்ன?
180 அடி (55 மீட்டர்கள்)
21. முற்கால சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள்?
1. தாதபுரம் கோவில், திண்டிவனம்
2. திருப்புறம்பியம் கோவில், கும்பகோணம்
22. தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலைக் கட்டியவர் யார்?
இரண்டாம் ராஜராஜ சோழன்
23. காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோவிலைக் கட்டியது யார்?
பிற்கால பாண்டியர்கள்
24. விஜயநகர காலத்துக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டு?
1. வரதராஜபெருமாள் கோவில், காஞ்சிபுரம்
2. ஜலகண்டேஸ்வரர் கோவில், வேலூர்
3. அழகியநம்பி கோவில், திருநெல்வேலி
4. கோபாலாகிருஷ்ணா கோவில், ஸ்ரீரங்கம்
5. ஆதிநாதா கோவில், திருநெல்வேலி
6. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி
25. விஜயநகர கால மண்டபங்களுக்கு எடுத்துக்காட்டு?
1. ஆயிரம் கால் மண்டபம், புதுமண்டபம் - மதுரை
2. ரதி மண்டபம் - திருநெல்வேலி
3. வானமாமலை கோவில் - திருநெல்வேலி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.