29.10.2016 : இன்று சர்வதேச இணைய தினம்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29-ஆம் தேதி சர்வதேச இணைய தினமாக கொண்டாடப்படுகிறது
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29-ஆம் தேதி சர்வதேச இணைய தினமாக கொண்டாடப்படுகிறது.2005-ஆம் ஆண்டில் இருந்து இந்த தினம் கொண்டாடபடுகின்றது.
1969-ஆம் ஆண்டில் இதே நாளில்தான் உலகின் முதல் கணினி வழி செய்தி அமெரிக்காவில் பறிமாறிக் கொள்ளப்பட்டது.
இன்றைய நவீன கால உலகில் இணையம் என்பது மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. இணையப் பயன்பாடு என்பது தொழில் சார்ந்ததாகவும், மருத்துவம், பொழுது போக்கு என எல்லாவற்றிலும் பரவியுள்ளது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக கிராமங்கள் முதல் நகரம் வரை ஒன்றினைந்ததுடன் இதன் பயன்பாட்டினால் உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு விஷயத்தைக் கூட செய்தியாகவோ, வேறு வகையிலோ நம்மால் உடனுக்குடன் அறிய முடிகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.