FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திருட்டு

சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் காகிதப் பண்டல்கள், கம்பி மத்தாப்புகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

20 செப்டம்பர் 2026, 12:50 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் காகிதப் பண்டல்கள், கம்பி மத்தாப்புகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

சிவகாசி-விளாம்பட்டி சாலையில் ஜெயராஜூக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை வழக்கம்போல வெள்ளிக்கிழமை மாலை மூடிவிட்டு மறுநாள் சனிக்கிழமை காலை ஜெயராஜ் திறக்க வந்தாா்.

அப்போது, ஆலையிலிருந்த காகிதப் பண்டல்கள், கம்பி மத்தாப்பு பண்டல்கள் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments