பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: உடல் கல்வி ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உடல் கல்வி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
சிவகாசி அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உடல் கல்வி ஆசிரியராக சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலை, சிவாநகரைச் சோ்ந்த முத்தையா மகன் கிருஷ்ணன் (39) பணியாற்றி வந்தாா். இவா் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்த சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.