FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செய்யறிவைக் கட்டுப்படுத்து! தெருவில் இறங்கிப் போராடிய ரோபோக்கள்! என்ன நடக்கிறது?

செய்யறிவைக் கட்டுப்படுத்து என்ற கோஷத்துடன் தெருவில் இறங்கி போராடிய ரோபோக்களின் விடியோ

10 செப்டம்பர் 2026, 1:37 pm IST
ரோபோக்கள் போராட்டம் - video grab
பகிர்:

போலந்து நாட்டின் டிஜிட்டல் விவகாரத் துறை அலுவலக வாயிலில், மனிதர்களின் வேலைகளைக் காப்பாற்றும் வகையில் செய்யறிவுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷமெழுப்பியவாறு ரோபோ மனிதர்கள், நாய் வடிவ ரோபோக்கள் கையில் கொடிகளைப் பிடித்துக் கொண்டு போராட்டத்தில் இறங்கியுள்ளன.

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்த வேண்டும், அதன் பயன்பாடு குறித்த கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று ரோபோக்களே போராடுகின்றன என்ற செய்தியைப் பார்க்கும்போது சற்று குழப்பம் நேரிடலாம். ஆனால் அது உண்மைதான். போலந்து நாட்டில் நடந்துள்ளது. கிட்டத்தட்ட 30 ரோபோக்கள் போலந்து நாட்டின் வர்சா மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டன.

ரோபோக்கள் மூலம், மனிதர்களின் வேலையை தானியங்கி முறையில் செய்து, மனிதர்களின் வேலையைப் பறிக்கும் நிலை அசுர வேகத்தில் நடந்தேறி வரும் நிலையில், அதனை எதிர்த்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஜனநாயகம் என்றழைக்கப்படும் ஒரு தன்னார்வ அமைப்பால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் ரோபோக்கள் கைகளில் கொடிகளை வைத்துக் கொண்டு, வட்டமாக சுற்றி சுற்றி நடந்து, ஒலிபெருக்கிகள் மூலம் முழக்கங்களை எழுப்பின.

பொதுவாக மனிதர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளலாம். ஆனால் யார் கேட்பது, யார் பார்ப்பது, அதுவே, செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ரோபோக்கள் போராடினால் என்று மாற்றி யோசித்ததே இந்த போராட்டத்துக்கான காரணம் என ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

செயற்கை நுண்ணறிவும் ரோபோக்களும், தொழிற்சாலைகளில் கோலோச்சுவதால் மனித வளம் எவ்வாறு பாதிக்கிறது என்பது ஏதோ எதிர்காலத்தில் நடக்கப்போவது அல்ல, ஏற்கனவே தொடங்கி விட்டது, அது ஒரு கொடுங்கனவு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டவே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

இந்தப் பாராட்டத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் மனித ரோபோக்கள் அகிபோட் ஏ3 வகைகளும் இரு கால்களுடன் நடக்கும் மனித உருவ ரோபோக்கள் முதல் நாய் போன்ற நான்கு கால் ரோபோக்கள் வரையிலான பல்வேறு வகையான ரோபோ மனிதர்கள் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளன.

அவைகள்இ, பணியிடங்களைப் பாதுகாப்போம், விதிமுறைகளை வகுக்க வேண்டிய நேரம் இது, காத்திருக்க வேண்டாம், ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்துங்கள் போன்ற முழக்கங்கள் ஒலிபெருக்கிகளில் ஒலித்துக்கொண்டே ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வருகின்றன.

இந்த போராட்டத்தின் விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. உண்மையில் இவை கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை. ஆனால், கவனிக்க யாருக்கும் மனமில்லை.

summary

Control Artificial Intelligence! Robots took to the streets to protest! What is happening?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments