FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

மோர்க்குழம்பு ருசியாக  இருக்க...

தக்காளிப்  பழங்களுடன் பூசணிக்காய்த் துண்டுகளைச் சேர்த்து  வேகவிட்டு சூப் செய்தால், சூப்  கெட்டியாக  இருப்பதுடன்  சத்தும்  சுவையும் கூடும். 

Updated On : 16 டிசம்பர் 2020, 6:00 am IST
பகிர்:


தக்காளிப் பழங்களுடன் பூசணிக்காய்த் துண்டுகளைச் சேர்த்து வேகவிட்டு சூப் செய்தால், சூப் கெட்டியாக இருப்பதுடன் சத்தும் சுவையும் கூடும்.

வடகத்தை வெறும் வாணலியில் வறுத்து விட்டு, பின் எண்ணெய்யில் பொரித்தால் நன்கு பொரியும்.

மீந்துப் போன ஜாமில் சிறிது தண்ணீர் விட்டுத் தளர்வாக கரைத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள், வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்தால் சுவையான இனிப்புப் பச்சடி தயாரிக்கலாம்.

Advertisement

Advertisement

பூர்ணக் கொழுக்கட்டை செய்யும்போது, வெடிக்காமலும் விரியாமலும் இருக்க, அரிசியுடன் உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து அரைக்கவேண்டும்.

கனிந்த பப்பாளிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிது பசும்பால் சேர்த்துக் கொதிக்க விடவும். கெட்டியானவுடன் தேவைப்படும் அளவு சர்க்கரை சேர்த்துக் கிளறி எடுத்தால் பப்பாளிப் பழ ஜாம் ரெடி. பிரெட், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

வெந்தயம், மிளகு, சீரகம், வேர்க்கடலை, பொட்டுக் கடலை, தனியா, மிளகாய் வற்றல் ஆகியவற்றைத் தேவைக்கேற்ப எடுத்து தேங்காய்ச் சேர்த்து நைசாக அரைத்து மோரில் கலந்து கொள்ளவும். அவற்றை மோர்க்குழம்பு வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து இறக்கினால் புது ருசியுடன் சுவையான மோர்க்குழம்பு தயார்.

தயிர்ப்பச்சடி நீர்த்துப் போகாமல் இருக்க இரண்டு தேக்கரண்டி பொட்டுக்கடலைப் பொடியைச் சேர்த்துக் கலந்தால் நீர்க்காமல் தயிர் பச்சடியின் சுவையும் சூப்பராக இருக்கும்.

இடியாப்பத்திற்கு மாவுப் பிசையும்போது அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்தால் இடியாப்பம் மென்மையாக இருக்கும்.

முருங்கைக்காயை அவியல், கூட்டு, சாம்பாரில் துண்டுகளாக நறுக்கிப் போடுவதற்கு பதிலாக அதன் சதைப்பகுதியை மட்டும் சேர்த்துச் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

சப்பாத்தி தேய்க்கும்போது தொட்டுக்கொள்ள சோளமாவு பயன்படுத்தினால் சப்பாத்தி நன்றாக வரும், மாவும் கொஞ்சமாகத்தான் செலவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments