FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

எளிய வைத்தியம்

கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகுகளைத் திணித்து, திறந்தவெளியில் ஓர் இரவு வைத்து மறுநாள் காலையில் இந்த மிளகுகளைச் சாப்பிட இருமல் நீங்கும்.

Updated On : 22 மே 2022, 6:00 am IST
பகிர்:


கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகுகளைத் திணித்து, திறந்தவெளியில் ஓர் இரவு வைத்து மறுநாள் காலையில் இந்த மிளகுகளைச் சாப்பிட இருமல் நீங்கும்.

தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து, 40 நாள்களுக்குச் சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்லபலம் ஏறும். உடலில் சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் ஏற்படும்.

மாதவிலக்கு வயிற்றுவலி நீங்க அதிகாலையில் 9 துளசி இலைகளை மென்று நின்று நீர் பருகி வர வலி நீங்கும்.

Advertisement

Advertisement

துளசி இலையுடன் கொஞ்சம் உப்பையும் சேர்த்து, நன்றாகக் கசக்கி பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் வலி குறையும்.

மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து உட்கொண்டால் வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.

ஒரு டம்ளர் எலுமிச்சைப் பழச்சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் வைத்து, குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

தேனுடன் மாதுளம் பழச்சாறு கலந்து ஒரு மாதம் காலம் அருந்தி வந்தால் ரத்தச் சோகை நீங்கும். 

இரவில் படுக்கச் சொல்லும் முன் தேனையும் வெங்காய துண்டுகளையும் மிதமான சுடுநீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

 வாழைக்காயைப் பயன்படுத்தியதும், அதன் தோலை வேக வைத்து துவையல் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண், அல்சரில் நிவாரணம் கிடைக்கும்.

எலுமிச்சை பழத் தோலைக் காயவைத்து, பொடி செய்து பல் துலக்கிவந்தால் வாய்துர்நாற்றம் இருக்காது.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிள்ளைகளுக்கு எலுமிச்சை சாறுடன் தேனை கலந்து கொடுத்தால், அந்தப் பழக்கம் மெல்ல நின்றுவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments