FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! - ஐ.நா. தகவலால் அதிர்ச்சி!

2026 ஜனவரி முதல் ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:53 pm IST
2026 ஜனவரி முதல் ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - கோப்புப் படம்
பகிர்:

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல், ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் தெரிவித்துள்ளார்.

இந்தத் தரவுகளின்படி, கடந்த டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில் ஈரான் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் கைதான 27 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் இந்த மரண தண்டனைகள் அனைத்தும் சர்வதேச அளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

இந்த மரண தண்டனைகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், 100-க்கும் அதிகமானோர் மரண தண்டனை நிறைவேற்றப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரானிய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அரசுப்படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், தாக்குதல் நடத்தியும் ஒடுக்கினர். இதனால், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

இத்துடன், ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் வெளியிட்ட தகவலில் அரசுக்கு எதிராகப் போராடிய 26 பேருக்கும், அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் 26 பேருக்கும் ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

The UN Human Rights Commission has announced that 56 people have been executed in Iran since January 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments