FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஈரானில் 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது! மரண தண்டனை விதிப்பா?

ஈரானில் 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 5:38 pm IST
ஈரான் - பிரதிப் படம்
பகிர்:

ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்த 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது செய்யப்பட்டதாக, ஈரானிய அரசு அறிவித்துள்ளது.

ஈரானின் தென்கிழக்கு மாகாணமான கெர்மனில், இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாத் அமைப்பிற்காகச் செயல்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த 21 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 21 பேரும் ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்து மொசாத் உளவாளிகளுக்கு அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற போர்களில், ஈரானிய கட்டமைப்புகள் குறித்த உளவாளிகளின் தகவலின் அடிப்படையில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், தலைவர்கள், விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

இதனால், ஈரான் அரசு அந்நாட்டில் கைது செய்யப்படும் உளவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையைக் கடுமையாக்கி உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது.

இருப்பினும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இஸ்ரேலிய உளவாளிகளுக்கான தண்டனைக் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, 2026 ஜனவரி முதல் ஈரானில் 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Iran has announced the arrest of 21 Israeli spies who gathered information on the Iranian military.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments