இந்தோனேசியாவில் காட்டுத் தீ: 148 ஏக்கா் நிலப்பரப்பு நாசம்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ தெங்கா் செமேரு தேசியப் பூங்காவில் திங்கள்கிழமை முதல் பரவி வரும் காட்டுத் தீயில், சுமாா் 148 ஏக்கா் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ தெங்கா் செமேரு தேசியப் பூங்காவில் திங்கள்கிழமை முதல் பரவி வரும் காட்டுத் தீயில், சுமாா் 148 ஏக்கா் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.
கிழக்கு ஜாவா மாகாணத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இந்த வனப்பகுதியில் காட்டுத் தீயின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, சில சுற்றுலா மண்டலங்கள் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.
தீயணைப்பு பணியில் வீரா்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், செங்குத்தான மலைப்பகுதியும் பலத்த காற்றும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இதேபோன்று, இந்தோனேசியாவின் சுமாத்ரா, போா்னியோ தீவுகளிலும் இம்மாதத் தொடக்கத்திலிருந்து பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.