ஆக. 12-ல் பகலை இரவாக்கும் முழு சூரிய கிரகணம்! இந்தியாவில் காண முடியுமா?
இந்தாண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் குறித்து...
இந்தாண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் வருகிற ஆக. 12 ஆம் தேதியில் நிகழவிருக்கிறது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் சந்திரன் வரும் நிகழ்வே சூரிய கிரகணம். இது ஆண்டுக்கு 2 முதல் 5 முறை நிகழும். இதில் சூரியனை நிலவு முழுவதுமாக மறைத்து, நிலவின் நிழல் மட்டுமே பூமி மீது விழும். 2024-க்குப் பின் உலகில் தெரியும் முழு சூரிய கிரகணம் இதுவே.
இந்த நிகழ்வின்போது, முழுவதுமாக இருள் சூழ்ந்து இரவுபோலக் காட்சியளிக்கும். ஆர்க்டிக் கடல், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, போர்ச்சுகல் என வடக்கு ஸ்பெயின் வரை மேற்கிலிருந்து கிழக்காக நகர்ந்து முடியும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இது பகுதி கிரகணமாக தெரியும்.
Advertisement
Advertisement
இருப்பினும், இந்தியாவில் இந்த நிகழ்வு ஆக. 12 ஆம் தேதி இரவு 9.04 மணி முதல் மறுநாள் (ஆக. 13) நள்ளிரவு 1.30 மணி வரையில் (சுமார் நான்கரை மணிநேரம்) நிகழ்வதால், இதனை இங்கு காண முடியாது.
ஆனால், இந்த நிகழ்வை நாசா நேரலையாக வெளியிடுவதால், அதன் வழியாக இணையதளத்தில் நாம் காணலாம்.
இதனிடையே, சூரிய கிரகணம் நிகழவிருப்பதையடுத்து, கூகுள் தேடுபொறியில் 'சூரிய கிரகணம்' 'Solar Eclipse' எனத் தேடினால் சூரியனை சந்திரன் மறைப்பது போன்ற சூரிய கிரகண நிகழ்வு திரையில் தோன்றுகிறது.
Where will the total solar eclipse 2026 be visible from?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.