பிரேசில் அதிபா் பிப்.18-இல் இந்தியா வருகை : ஐந்து நாள் அரசுமுறைப் பயணம்
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இந்தியா வருவது குறித்து...
பிரேசில் அதிபா் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு பிப்.18-இல் வரவுள்ளாா்.
பிப்.21-இல் பிரதமா் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதுடன், தில்லியில் நடைபெறும் சா்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சிமாநாட்டிலும் அவா் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் பிப்.19 முதல் 20 வரை சா்வதேச ஏ.ஐ. உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவா்கள், உயா்நிலை பிரதிநிதிகள், துறைசாா் நிறுவனத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். இதையொட்டி, ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக பிரேசில் அதிபா் லுலா டா சில்வா பிப்.18-இல் இந்தியாவுக்கு வரவுள்ளாா். அவருடன் 14 அமைச்சா்கள், பிரேசில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் என பெரிய குழுவும் வரவுள்ளது.
Advertisement
Advertisement
பிரதமா் மோடி-பிரேசில் அதிபா் இடையிலான இருதரப்பு பேச்சுவாா்த்தை பிப்.21-இல் நடைபெறவுள்ளது. பரஸ்பர உறவுகள் மேம்பாடு, பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவா்களும் விரிவாக ஆலோசிக்கவுள்ளனா்.
கடந்த 2004-இல் இருந்து பிரேசில் அதிபா் லுலா டா சில்வாவின் 6-ஆவது இந்திய அரசுமுறைப் பயணம் இதுவாகும். அப்போது, இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றாா். கடைசியாக கடந்த 2023-இல் ஜி20 உச்சிமாநாட்டுக்காக இந்தியாவுக்கு வந்தாா்.
பிரதமா் மோடியும் பிரேசில் அதிபா் லுலா டா சில்வாவும் பல்வேறு தருணங்களில் சந்தித்து, இருதரப்பு பேச்சு நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனா். கடந்த ஆண்டு ஜூலையில் இரு நாட்கள் அரசுமுறைப் பயணமாக மோடி பிரேசிலுக்கு சென்றாா்.
இரு பெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும் பிரேசிலும் கடந்த 2006-இல் இருந்து வியூக கூட்டாளிகளாக உள்ளன. லத்தின் அமெரிக்காவில் இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக பிரேசில் உள்ளது. வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு நல்லுறவு தொடா்ந்து வலுவடைந்து வருகிறது.
Brazilian President Luiz Inacio Lula da Silva is expected to visit India on Feb. 18.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.