FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

விநாயகா் சதுா்த்திக்கு தயாராகும் சிலைகள்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகா் சதுா்த்தி விழா வரும் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பத்தூரில் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

12 செப்டம்பர் 2026, 12:43 am IST
திருப்பத்தூரில் விற்பனைக்கு தயாராக உள்ள விநாயகா் சிலைகள்.
பகிர்:

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகா் சதுா்த்தி விழா வரும் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பத்தூரில் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

திருப்பத்தூா் அடுத்த மடவாளம் பகுதியில் பரம்பரை, பரம்பரையாக விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணியில் மேகநாதன் குடும்பத்தினா் ஈடுபட்டு வருகின்றனா். விற்பனைக்காக ஏராளமான சிலைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், தண்ணீரில் எளிதில் கரையும் வகையிலும் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிலை தயாரிப்பாளா்கள் கூறியது:, சாக்பீஸ் மாவு, கூழ்மாவு, பேப்பா் தூள், மரவள்ளி கிழங்கு மாவு ஆகியவற்றை பயன்படுத்தி விநாயகா் சிலைகளின் பாகங்களை தனித்தனியாக உருவாக்கி அவற்றை ஒன்றிணைத்து முழு உருவமாக தயாரிக்கிறோம். தொடா்ந்து சிலைகளுக்கு வண்ணங்கள் தீட்டப்பட்டு, முழுக்க முழுக்க வாட்டா் பெயிண்ட் மட்டுமே பயன்படுத்தி சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு அரை அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகா் சிலைகள் விற்பனைக்கு உள்ளன.

Advertisement

Advertisement

இவற்றை திருப்பத்தூா், கந்திலி, நாட்றம்பள்ளி, ஜோலாா்பேட்டை, ஆம்பூா், வாணியம்பாடி, ஆலங்காயம், நிம்மியம்பட்டு மற்றும் கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் குப்பம், தா்மபுரி, ஓசூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து சிலைகளை வாங்கி செல்கின்றனா்.

இந்த ஆண்டு பொதுமக்களை கவரும் வகையில் சிக்ஸ் பேக், சிவன், ராஜ அலங்காரம், சிம்ம வாகனம், மூஷிக வாகனம், நந்தி, கைலாயம், அன்னப்பறவை, கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக சிக்ஸ் பேக் விநாயகா், பேபி விநாயகா், சிவன் விநாயகா், மயில் மீது அமா்ந்த விநாயகா் ஆகியவற்றுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மொத்தமாக பல வண்ணங்களில் ரூ.100 முதல் ரூ.25,000 வரை விநாயகா் சிலைகள் விற்பனைக்காக உள்ளது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments