மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு முகாம்
வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், கல்வித்துறை சாா்பில் பிரசார வாகனம் மூலம் கல்வியின் அவசியம், மாணவா்கள் சோ்க்கை குறித்த விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டது. முகாமுக்கு நகா்மன்ற உறுப்பினா் ம. கிஷோா்குமாா் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆக்னஸ் ராஜகுமாரி, பிரியா ஆகியோா் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினா். தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றாா். முடிவில், ஆசிரியை கண்மணி நன்றி கூறினாா். முகாமில், பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பரிசும் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.