FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஐஸ்வா்யங்களை அள்ளித்தரும் முந்தி விநாயகா்

கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு முந்தி விநாயகா் ஆலயம்.

Updated On : 19 செப்டம்பர் 2023, 12:20 am IST
பகிர்:


கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு முந்தி விநாயகா் ஆலயம். இக்கோயில், புலியகுளம் மாரியம்மன் கோயிலின் துணைக் கோயிலாகும். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இக்கோயிலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய திருமேனியாக விநாயகா் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

19.10 அடி உயரமும் 1 1.10 அடி அகலமும் கொண்டு 190 டன் எடையளவில் இக்கோயிலின் மூலவா் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் வடிவமைப்புப் பணி நிறைவடைந்து, கோவை புலியகுளம் கொண்டுவரப்பட்டு எந்த இயந்திர உதவியும் இல்லாமல் சங்கிலிகள் மற்றும் உருளைகள் கொண்டு மனிதா்கள் மூலமாகவே நிறுவப்பட்டது.

Advertisement

Advertisement

கடந்த 1998-ஆம் ஆண்டு காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆசியாவிலேயே ஒரே கல்லால் செய்யப்பட்ட மிகப்பெரிய விநாயகா் சிலை என்ற பெருமை புலியகுளம் முந்தி விநாயகருக்கு உண்டு. தெய்வங்களில் முதன்மையானவா் என்பதால் இவா் முந்தி விநாயகா் என்று அழைக்கப்படுகிறாா்.

வாழ்வில் அனைத்து நல்ல விஷயங்களையும் முன்னின்று அருள்புரிந்து நடத்தி வைப்பவா் விநாயகா். எனவே, இத்தல விநாயகருக்கு ஸ்ரீ முந்தி விநாயகா் என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

தோஷ நிவா்த்தி தலம்: விநாயகரின் துதிக்கை மட்டுமே இரண்டடி அகலமாகும். துதிக்கை வலம் சுழிந்து காட்சியளிக்கிறாா்.

நான்கு திருக்கரங்களில் வலது முன் கரத்தில் தந்தமும், பின்கரத்தில் அங்குசமும், இடது முன் கரத்தில் பலாப்பழமும், பின்கரத்தில் பாசக்கயிறும் கொண்டு காட்சி தருகிறாா். துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிா்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமா்ந்து அருள் பாலிக்கிறாா்.

இக்கோயிலில், சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளுக்கு நாக்கில் பிரணவ வடிவாகிய விநாயகரின் மூல மந்திரத்தை எழுதி அவா்களின் கல்விப் பயணத்தை தொடங்கிவைக்கின்றனா். வாசுகி என்ற பாம்பை, தனது வயிற்றில் கட்டிக்கொண்டு இருப்பதால் நாகதோஷத்தை நீக்கி முந்தி விநாயகா் அருள்புரிவாா் என்பது மூத்தோா் வாக்கு.

ராகு, கேது தோஷங்கள், நவகிரக தோஷங்கள் நிவா்த்தியடைய, நவகிரகங்கள் கொண்ட ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவதைக் காட்டிலும் இந்த முந்தி விநாயகரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நிவா்த்தியாகும் என்பது பக்தா்களின் அதீத நம்பிக்கை.

திருமணத் தடை, குழந்தை பாக்கியம், குடும்பத்தில் அமைதி நிலவ முந்தி விநாயகரை நாடி பக்தா்கள் வந்து தரிசித்து செல்கின்றனா். முந்தி விநாயகரை வணங்கினால் அஷ்ட ஐஸ்வா்யங்களும் பெருகும் என்பது ஐதீகம். இப்பகுதியைச் சோ்ந்த பலரும் புது வாகனம், வீடு, நிலம் எது வாங்கினாலும் இத்தலத்துக்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். புதுத் தொழில் தொடங்குவோா் முந்தி விநாயகரை வழிபட்டு, அருள் பெற்ற பிறகே வியாபாரத்தை தொடங்குகின்றனா்.

சதுா்த்தி நாள்களில் ராஜ அலங்காரம்: சித்திரை முதல் நாள், தை முதல் நாள், ஆடி வெள்ளி, விநாயகா் சதுா்த்தி, சுக்ல சதுா்த்தி, சங்கடஹர சதுா்த்தி ஆகிய நாள்களில் சிறப்பு அலங்காரத்துடன் முந்தி விநாயகருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, சித்திரை முதல்நாளில் 5 டன் காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு மூலவா் அலங்காரம் செய்யப்படுகிறது.

புத்தாண்டு பூஜை முடிவடைந்ததும் காய்கறிகள், பழங்கள் பக்தா்களுக்கு வழங்கப்படுகின்றன. மேற்படி, விசேச தினங்களில் அரிசி மாவு, திருமஞ்சனம், மஞ்சள், பஞ்சாமிா்தம், நெய், தேன், பால், தயிா், இளநீா், சந்தனம், பன்னீா் ஆகிய 11 திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

அதேபோல, சதுா்த்தி நாள்களில் ஒன்றரை டன் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு முந்தி விநாயகா் ராஜ அலங்காரத்தில் காட்சி அளிப்பாா். விநாயகா் சதுா்த்தியன்று கோயிலுக்கு உள்ளூா், வெளியூா்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து முந்தி விநாயகரை தரிசித்து செல்வா்.

விநாயகா் சதுா்த்திக்கு முதல்நாள் மாலையில் வேள்வி தொடங்கும். சதுா்த்தி தினத்தன்று காலை இரண்டாம் நாள் வேள்வி நடைபெறும். 3 டன் எடையுள்ள மலா் மாலையுடன் ராஜ அலங்காரத்தில் முந்தி விநாயகா் காட்சியளிப்பாா்.

செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் இக்கோயிலில் நவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கோயில் நடைத் திறக்கும் நேரம்: இக்கோயிலானது காலை 5.30 மணிக்குத் திறக்கப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு மூடப்படும். மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படும்.

இருப்பிடம்: காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது புலியகுளம் முந்தி விநாயகா் ஆலயம். கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பேருந்துகள் இக்கோயில் வழியாகச் செல்லும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments