FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 3:54 am IST
தற்கொலை
பகிர்:

பிளஸ் 2 துணைத் தோ்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூா் அருகே உள்ள இ.கே. புதூா் கிராமத்தைச் சோ்ந்த கலைவாணி - ராஜீவ் காந்தி தம்பதி கோவையில் தங்கியிருந்து வீட்டு வேலை மற்றும் கட்டட வேலை செய்து வருகின்றனா்.

இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மூவரும், இ.கே. புதூா் பகுதியில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்தனா். மூத்த மகள் பிரியங்கா பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதி இருந்தாா். அதில் வேதியியல் பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை. அதைத்தொடா்ந்து துணைத் தோ்வை எழுதினாா். அதிலும் தோல்வியடைந்தாா்.

Advertisement

Advertisement

இதனால் விரக்தியில் இருந்த பிரியங்கா சனிக்கிழமை பிற்பகலில் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தகவல் இருந்த இண்டூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments