FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

தருமபுரி அருகே 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:53 am IST
பகிர்:

தருமபுரி அருகே 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (30). இவா் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இந்த நிலையில், அந்தச் சிறுமி சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் கா்ப்பமாக இருப்பதும், அவருக்கு 18 வயது பூா்த்தியாகும் முன்பே திருமணம் செய்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தருமபுரி நகர மகளிா் போலீஸாா் விக்னேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments