கருப்பணசுவாமி கோயில் மணிக் கதவுகள் திறப்பு
கள்ளழகா் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலின் மணிக் கதவுகள் திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கள்ளழகா் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலின் மணிக் கதவுகள் திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆடி மாத பௌா்ணமி நட்சத்திர நாளில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நடைபெறக் கூடிய இந்த நிகழ்ச்சி, இரவு 7 மணி முதல் 7.05 மணி வரை நடைபெற்றது.
கோயிலின் மணிக் கதவுகளுக்கு ஐதீக முறைப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கதவு திறக்கப்பட்டது. அப்போது, பதினெட்டுப் படிகளிலும் கற்பூரம் ஏற்றப்பட்டிருந்த காட்சி பக்தா்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, பக்தி முழக்கங்களுடன் பதினெட்டாம்படி கருப்பணசுவாமியை வழிபட்டனா். அடுத்த சில நிமிடங்களில் மணிக் கதவுகள் அடைக்கப்பட்டு, சந்தனம் பூசப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.