FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் புதிய வசதிகள்: காணொலி வாயிலாக திறந்துவைத்தார் முதல்வர்

நடுவக்குறிச்சி துணைமின் நிலையத்தில்  ஒரு கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த திட்டங்களை காணொலி வாயிலாக முதல்வர் துவக்கி வைத்தார்.

Updated On : 16 ஆகஸ்ட் 2022, 1:10 pm IST
நடுவக்குறிச்சியில் நடந்த விழாவில் குத்து விளக்கு ஏற்றுகிறார் தெற்கு ஒன்றிய திமுக செயலர் ஆ.பாலமுருகன்.
பகிர்:

சாத்தான்குளம்: நடுவக்குறிச்சி துணைமின் நிலையத்தில்  ஒரு கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த திட்டங்களை காணொலி வாயிலாக முதல்வர் துவக்கி வைத்தார்.
 

தமிழக முதல்வர் அவர்களால் காணொளி காட்சி மூலம் தமிழகம் முழுவதும் ரூ.284.61 கோடி மதிப்பீட்டில் மின் நிலையங்கள் மற்றும் புதிய மின்மாற்றிகள் துவக்க விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி துனை மின்நிலையத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த திட்டங்களை காணொளி மூலம் சென்னையில் இருந்து துவக்கி வைத்தார்.

Advertisement

Advertisement

நடுவக்குறிச்சி துணை மின்நிலையத்தில் துணை மின் பொறியாளர் ராஜேஷ் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகன், நடுவக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார், அரசூர் ஊராட்சி தலைவர் தினேஷ் ராஜ சிங், திமுக ஒன்றிய பொருளாளர் ஆனந்த், தாமரைமொழி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மின் மாறிய ஊழியர்கள் மற்றும் திமுக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments