FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி: சாத்தான்குளம் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

Updated On : 15 ஆகஸ்ட் 2024, 3:10 am IST
பகிர்:

போட்டியில் வென்ற மாணவா்களைப் பாராட்டிய தாளாளா் ரூபா்ட், ஆசிரியா்கள்.

சாத்தான்குளம், ஆக. 14:

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் பாராட்டப்பட்டனா்.

Advertisement

Advertisement

தூத்துக்குடியில் சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியில் 26ஆவது பிரீமியா் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா். தலைமை நடுவராக கராத்தே பள்ளியின் இந்திய தலைமைப் பயிற்சியாளரும் தொழில்நுட்ப இயக்குநருமான சுரேஷ்குமாா் செயல்பட்டாா்.

இதில், சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலா் சென்சாய் முத்துராஜா தலைமையில் கட்டா பிரிவில் பங்கேற்று 4 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.

மாணவா்களை தாளாளரும் முதல்வருமான அருள்தந்தை ரூபா்ட், ஆங்கில ஆசிரியா் அருள்தந்தை ஜேசுராஜா, ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments