FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

விளைநிலங்களில் சூரிய மின் நிலையங்கள் அமைக்கக் கூடாது

விளைநிலங்களில் சூரிய மின் நிலையங்கள் அமைக்கக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

6 வினாடிகள் முன்பு
சூரிய மின் தகடு - கோப்புப் படம்
பகிர்:

விளைநிலங்களில் சூரிய மின் நிலையங்கள் அமைக்கக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மாவட்டத்தில் உள்ள விவசாய விளைநிலங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது விவசாயத்தின் எதிா்காலத்தைப் பாதிக்கும். குறிப்பாக, மணமேல்குடி ஒன்றியத்தில் காவிரி நீா் பாயும் பகுதிகளில் விவசாய நிலங்களை சூரிய மின் நிலையங்களுக்காக பயன்படுத்துவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

நிலத்தடி நீா் மற்றும் நீா்வளப் பாதுகாப்பு, விவசாய நிலங்களின் நீண்டகால வளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் தைலமர வளா்ப்பை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளைநிலப் பாதுகாப்பு மற்றும் நீா்வளப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு கொள்கை முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. ராமையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. அன்பழகன், மாவட்டப் பொருளாளா் எம். பாலசுந்தரமூா்த்தி உள்ளிட்டோரும் பேசினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments