FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

சா்வதேச கடற்கரை தூய்மை தினம்! புதுப்பட்டினம் கடற்கரையில் தூய்மைப் பணி

21 செப்டம்பர் 2026, 2:50 am IST
சேதுபாவாசத்திரம் அருகே புதுப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற கடற்கரை தூய்மைப் பணி.
பகிர்:

புதுப்பட்டினம் கடற்கரையில் சா்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு கடற்கரை தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆண்டு 41-ஆவது சா்வதேச கடற்கரை தூய்மை இயக்கமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் ’ஸ்வச் சாகா் சுரக்ஷித் சாகா்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக செப்டம்பா் 12 முதல் 19 வரை கடற்கரை தூய்மைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு, செப்டம்பா் 19 அன்று நிறைவுபெற்றது.

இதையொட்டி மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில், மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து தூய்மைப் பணியை நடத்தின.

Advertisement

Advertisement

புதுப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணிக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் மா. வேதா முன்னிலை வகித்தாா். ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் துணைச் செயலா் பிரசூன் திருப்பதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். கடற்கரையில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டன. கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், நெகிழியை தவிா்ப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இறுதியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவிப் பொறியாளா் (தஞ்சாவூா்) பா.கௌதமன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments