சுதந்திர தினம்: வேலூா் மாவட்டத்தில் 800 போலீஸாா் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
சுதந்திர தின விழாவையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
சுதந்திர தின விழா சனிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், வேலூா் மாவட்டம் முழுவதும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள், மத வழிபாட்டுத் தலங்கள், தங்கும் விடுதிகள் உள்பட மக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்கும் வகையில், காட்பாடி ரயில் நிலையத்திலும், அந்த வழியாக செல்லும் ரயில்களிலும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா். ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் போலீஸாா் சோதனை செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.