பால் வண்டியில் போதைப் பொருள் கடத்திய இளைஞா் கைது
காட்டுமன்னாா்கோவில் அருகே பால் வண்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் பாபு மற்றும் போலீஸாா், காட்டுமன்னாா்கோவில் அருகே மோவூா் வெள்ளை மதகு அருகே சனிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த பால் மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 3 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இவற்றை வாகனத்துடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடத்தி வந்த திருச்சின்னபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த ஐயப்பனை (38) கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.