தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல்: 5 கம்பெனி துணை ராணுவம் வருகிறது!
தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவப் படையினா் புதுச்சேரி வரவுள்ளனா்.
தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவப் படையினா் புதுச்சேரி வரவுள்ளனா்.
இதுகுறித்து புதுச்சேரி வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளா் வம்சித ரெட்டி செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலையொட்டி, அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகிறோம். பணம், பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்வதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தட்டாஞ்சாவடி தொகுதியில் 37 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் இரண்டு வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளித்து எவ்விதப் பிரச்னையும் இன்றி தோ்தலை நடத்த அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இடைத் தோ்தலுக்காக 5 கம்பெனி துணை ராணுவம் புதுச்சேரி வருகிறது.
50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்பவா்கள், அதற்கான உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும். ஆவணம் இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். வாக்காளா்களை அச்சுறுத்தும் பணியில் அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் என யாா் ஈடுபட்டாலும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும். வாக்காளருக்குப் பணம் கொடுப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக கைது செய்யப்படுவா் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.